Nadigar Sangam executive body meeting

http://thatstamil.oneindia.in/img/2010/02/23-mumtaj-200.jpg
காலக் கொடுமை என்பார்களே.. அதற்கு சரியான அர்த்தம் தெரிய பின்வரும் செய்தியைப் படியுங்கள்.

முதல்வர் விழாவில் உண்மையற்ற பேச்சுப் பேசி திரையுலக ஒற்றுமையைக் குலைத்ததற்கு அஜீத் வருத்தம் கேட்பது, அஜீத் பேச்சுக்கு கைதட்டியதன் மூலம் நடிகர்களின் ஒற்றுமையைக் குலைத்த ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தது போன்ற விவகாரங்களை ஆராய்ந்து மேல்நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது.

பிப்ரவரி 27ம் தேதி நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடும் இந்தக் கூட்டத்தில் நடிகர்கள் சத்யராஜ், குயிலி, மும்தாஜ், சின்னிஜெயந்த், மயில்சாமி, எஸ்வி சேகர், பூச்சி முருகன் ஆகியோர் பங்கேற்று, ரஜினி-அஜீத் மீது என்ன மாதிரி மேல் நடவடிக்கை எடுப்பது என்று விவாதிப்பார்களாம்.

அதேபோல, ஜாகுவார் தங்கம் மீது கல்வீசித் தாக்கிய அஜீத் (முடிவே பண்ணிட்டாங்க போல!) மற்றும் அவரது மேனேஜர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் விவாதிக்கப்படுமாம். இந்த விவகாரத்தில் நடிகர் சங்க உறுப்பினரான ஜாகுவார் தங்கம் புகார் கொடுத்திருப்பதால், இந்த விவகாரத்தை சாதாரணமாக விட்டுவிட முடியாது என நடிகர் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

நேற்றே அஜீத் வருத்தம் தெரிவிப்பார் என்று நடிகர் சங்கம் எதிர்பார்த்ததாம். ஒரு பேப்பரில் வருந்துகிறேன் என்று எழுதி கொடுத்துவிட்டு வேலையைப் பாருங்கள்... இதெல்லாம் சகஜம் என்று சங்கத்தின் முக்கிய புள்ளி ஒருவர் அஜீத்திடம் சமரசமாக சொல்லிப் பார்த்தாராம்.

ஆனால் அஜீத்திடமிருந்து அப்படி எந்த அறிக்கையும் வரவில்லை.

எனவேதான் அடுத்த அஸ்திரமாக நடிகர் சங்க செயற்குழுவைக் கூட்டி, கமிட்டி உறுப்பினர்கள் சத்யராஜ், முரளி, எஸ்.வி.சேகர், சூர்யா, மயில்சாமி, சின்னி ஜெயந்த், மும்தாஜ், சத்யபிரியா, நளினி, பாத்திமாபாபு, குயிலி, நம்பிராஜன், பூச்சி முருகன் ஆகியோர் பங்கேற்க, சங்க தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி தலைமையில் புதிய முடிவு எடுப்பார்களாம்.

Comments

Most Recent