'I will marry only an business man' Sameera Reddy

http://lh6.ggpht.com/callravi/RlBjujavToI/AAAAAAAAAmE/_blJrbhmKHk/sameerareddy.jpg
எக்காரணம் கொண்டும் ஒரு நடிகரை திருமணம் செய்ய மாட்டேன். மிகப்பெரிய தொழில் அதிபரைத்தான் மணப்பேன் என்று நடிகை சமீரா ரெட்டி கூறியுள்ளார். பாலிவுட்டில் கோலோச்சி விட்டு, தெலுங்கு, தமிழில் கால் பதித்திருப்பவர் நடிகை சமீரா ரெட்டி. நீச்சல் உடையில் தொடங்கி, பட்டுப்புடவை வரை விதவிதமான காஸ்ட்யூம் அணிந்து திரையில் தோன்றி ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வரும் இந்த ஆறடி உயர நடிகை வாரணம் ஆயிரம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பெயரிடப்படாத தமிழ் படமொன்றில் நடித்து வரும் சமீரா அளித்துள்ள பேட்டியில், எனக்கு சின்ன வயசுல இருந்தே சினிமா என்றால் ரெம்ப இஷ்டம். நிறைய படங்களை தியேட்டரில் சென்று பார்த்துள்ளேன். இந்த ஆர்வத்தால்தான் என்னால் சினிமாவில் ஓரளவு நடிக்க முடிகிறது. என்னுடன் படத்தில் நாயகனாக நடிக்கும் நடிகர்களை இணைத்து கிசுகிசு கிளப்புகிறார்கள். இதை கேட்கும்போது ரொம்ப வேடிக்கையாக உள்ளது, என்று கூறியுள்ளார்.

திருமணம் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில், நான் ஒருபோதும் நடிகரை காதலிக்க மாட்டேன். நடிகரை திருமணம் செய்யப்போவதும் இல்லை. மிகப்பெரிய தொழில் அதிபரைத்தான் மணப்பேன். எனது தந்தை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதால் எனக்கு தொழில் பற்றிய விஷயங்கள் அனைத்தும் அத்துபடி. இதனால் கணவருக்கு தொழிலில் உறுதுணையாக இருக்க முடியும் என்று நம்புகிறேன், என்றார் சமீரா ரெட்டி. விவரமான பொண்ணுதான்!

Comments

Most Recent