நித்யானந்தா சாமியாரின் செக்ஸ் வீடியோவில் சிக்கிய நடிகை ரஞ்சிதா, போலீஸ் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்ப அமெரிக்காவுக்கு ஓட...
நித்யானந்தா சாமியாரின் செக்ஸ் வீடியோவில் சிக்கிய நடிகை ரஞ்சிதா, போலீஸ் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்ப அமெரிக்காவுக்கு ஓடிவிட்டதாகத் தெரிகிறது.
நித்யானந்தன்- ரஞ்சிதா செக்ஸ் வீடியோ வெளியானதும் இருவருமே தலைமறைவாகியுள்ளனர். எங்கோ பதுங்கியிருந்தபடி நித்யானந்தா மட்டும் அவ்வப்போது சிடி அனுப்புவதும் தனக்கு வேண்டியவர்களை வைத்து பேட்டி கொடுப்பதுமாக உள்ளார்.
ரஞ்சிதாவோ செல்போனில் பேட்டி கொடுத்து வந்தார்.
இந் நிலையில், நித்யானந்தா மீது ஏராளமான வழக்குகள் தமிழகத்திலும் கர்நாடகத்திலும் பதிவு செய்யப்பட்டன.
நிதி மோசடி, நம்பிக்கை மோசடி என பல வழக்குகள் கர்நாடகத்தில் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் ரஞ்சிதாவும் ஒரு கூட்டாளியாக மற்றும் சாட்சியாக விசாரிக்கப்படுவார் என அறிவித்த போலீசார், அவரைத் தேடி வருவதாகவும் கூறினர்.
மேலும், மர்ம நபர்கள் சிலர் ரஞ்சிதாவின் சென்னை வீட்டை கண்காணிப்பதாகவும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பரபரப்பைக் கிளப்பிவிட்டுள்ளது ரஞ்சிதா தரப்பு. இந்தக் காரணத்தை முன்வைத்தே போலீசாரின் பிடியில் சிக்காமல் அவர் அமெரிக்காவுக்கு தப்பி ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது.
நித்யானந்தன் வீடியோ வெளியானதுமே, ரஞ்சிதா- நித்யானந்தன் பாஸ்போர்ட்டை முடக்காமல் விட்டுவிட்டது போலீஸ். இதில் உயர்மட்டத்தில் உள்ள சிலரது அழுத்தங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றவாம்.
அதன் விளைவுதான் இப்போது குறைந்தபட்ச விசாரணைக்கு கூட வராமல் தண்ணி காட்டுகிறார்கள் இருவரும் என்கிறார்கள். மேலும் சாமியார் விவகாரத்தில் போலீஸ் எந்த திசையில் போவது என்றே தெரியாமல் குழம்புவதாகவும் கூறப்படுகிறது.
Comments
Post a Comment