Shimbu + Trisha = Love + Romance

இப்போது தான் திரைக்கு வந்துள்ளது 'விண்ணைத்தாண்டி வருவாயா'. ஆனால் அதில் நடித்த இருவரைப்பற்றியும் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் எப்போதோ வரத்தொடங்கிவிட்டன.படத்தில் ஜோடி போலவே, நிஜத்திலும் திரிஷாவை சிம்பு காதலிப்பதாக கிசு கிசு பரவத்தொடங்கியது. சிம்பு திரிஷாவை காதலிப்பது உண்மையா? என கௌதமிடம் கேட்டால், 'சிம்பு தனக்கு கதாநாயகியாக வரும் யாரையும் உடனே காதலிக்க ஆரம்பித்து விடுவார் என' வெடிக்கிறார்.
'படத்தில் மட்டும் தான் திரிஷாவை காதலித்தேன். நிஜத்தில், நான் காதலித்தது ஒருத்தியை தான். இப்போது பிரிந்து விட்டோம். சிம்புவை இனி நீங்கள் வேறு கோணத்தில் பார்க்கலாம். தற்போது நடிப்புக்கே நான்  முக்கியத்துவம் கொடுக்கிறேன். கொஞ்சம் இடைவெளிவிட்டு டைரக்ஷன் தொழிலையும்
கவனிப்பேன் என்கிறார் சிம்பு.

இதே விடயத்தை திரிஷாவிடம் கேட்கப்போனால், அம்மணி பொலிவூட்டுக்கு சென்று விட்டதாக தகவல். தற்சமயம் 'கத்தா மீட்டா' எனும் திரைப்படத்தில் அக்க்ஷய் குமாருடன் ஜோடி சேர்கிறாராம். இந்த சமர் சீசனுக்கு படம் வெளிவருமாம். இன்னமும் பாடல்கள் மட்டும் தான் எடுபடவிருக்கிறதாம்..

சரி அதெல்லாம் விடுங்க.. திரிஷா அடுத்து தமிழில் கூட்டு சேரப்போவது யாரோடன்னு தெரியுமா? பத்மசிறீ கமல்ஹாசனுடன், 'யாவரும் கேளீர்' திரைப்படத்தில் உதய நிதி ஸ்டாலின் தயாரிப்பில், ரெட்ஜெயண்ட் இந்தப்படத்தை தயாரிக்கிறார்களாம்..

Comments

Most Recent