Entertainment
›
Cine News
›
நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!! | Nayanthara will commit suicide if she misses me says Prabhudeva
நயன்தாரா தற்கொலை செய்வார்! பிரபுதேவா உருக்கம்!! | Nayanthara will commit suicide if she misses me says Prabhudeva
நான் கைவிட்டுவிட்டால் நயன்தாரா தற்கொலை செய்து கொள்வார் என்று நடிகர் பிரபுதேவா கூறியுள்ளார். பிரப...
நயன்தாராவுக்கு, பிரபுதேவா வைர டாலர் பதித்த தங்க சங்கிலியை காதல் பரிசாக கொடுத்தார். நயன்தாராவோ, பிரபுதேவாவின் பெயரை பச்சை குத்தி காதலின் ஆழத்தை வெளிப்படுத்தினார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் நயன்தாரா - பிரபுதேவா ஜோடியை எப்படியாவது பிரித்து விட வேண்டும் என பிரபுதேவாவின் மனைவி ரமலத் முயற்சி செய்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக தமிழ்திரையுலக முக்கிய பிரமுகர்கள் சிலரிடம் ரமலத் முறையிட்டார். ``என்னிடம் இருந்தும், என் குழந்தைகளிடம் இருந்தும் என் கணவரை நயன்தாரா பிரித்து சென்று விடுவாரோ என்று பயப்படுகிறேன். நயன்தாராவின் பிடியில் இருந்து என் கணவரை மீட்டு, எங்களுடன் சேர்த்து வையுங்கள்'' என்று அழுதுகொண்டே கூறியிருக்கிறார். அதைக்கேட்டு உருகிப்போன அந்த பிரமுகர்கள், பிரபுதேவாவை நேரில் வரவழைத்து, பஞ்சாயத்து பேசினார்கள். அவர்களிடம் பிரபுதேவா, ``நயன்தாராவை விட்டு என்னால் பிரிய முடியாது. அந்த அளவுக்கு நாங்கள் நெருக்கமாகி விட்டோம். நான் கைவிட்டால்... நயன்தாரா தற்கொலை செய்து கொள்வார்'' என்று கூறிவிட்டாராம். இதையடுத்து பஞ்சாயத்து பேச வந்தவர்கள் நயன் - பிரபு விவகாரத்தை அப்படியே விட்டு விட்டுச் சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments
Post a Comment