Actress Nadhiya to don the mantle of Jackpot | ஜெயா டிவி..புது 'ஜாக்பாட் ராணி' நதியா!

http://icdn1.indiaglitz.com/tamil/news/nathiya27012005_1.jpg
ஜெயா டிவியின் ஜாக்பா ட்நிகழ்ச்சியை நதியா தொகுத்து வழங்கவுள்ளாராம்.

நடிகை குஷ்புதான் நீண்ட காலமாக ஜாக்பாட் நிகழ்ச்சியை நடத்தி வந்தார். ஆனால் தடாலடியாக அவர் திமுகவில் போய்ச் சேர்ந்து விட்டதால் கடுப்பான ஜெயா டிவி நிர்வாகம் குஷ்புவை தூக்கி விட்டது. அத்தோடு ஜாக்பாட் நிகழ்ச்சியையும் நிறுத்தி விட்டது.

இந்த நிலையில் புத்தம் புதுப் பொலிவுடன், ஜாக்பாட் நிகழ்ச்சியை மீண்டும் கொண்டு வருகிறது ஜெயா டிவி. இதற்கு சீசன் டூ என பெயரிட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பிரபலமான முகங்கள் சிலரை அணுகினர். அவர்களில் நதியா நிகழ்ச்சியை தொகுத்து அளிக்க ஒப்புக் கொண்டாராம.்

ஹீரோயினாக படு பிசியாக நடித்து வந்த நதியா பல ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். பின்னர் கல்யாணம், கணவன், குழந்தைகள் என செட்டிலானார். பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் நடிக்க வந்தார். அம்மா கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்தார் - ஹீரோயின் ரேஞ்சுக்கு முக்கியத்துவத்துடன்.

சமீபத்தில் அவரை டிவி சீரியலில் நடிக்க வைக்க சிலர் அணுகியபோது அதை ஏற்க மறுத்து விட்டார். இந்த நிலையில் ஜெயா டிவியிலிருந்து ஜாக்பாட் வாய்ப்பு தேடி வந்தபோது அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டாராம்.

ஒரு காலத்தில் நதியா அணிந்து வந்த ஆடைகள், அணிந்த ஆபரணங்கள் ரொம்பப் பிரபலம். நதியா தோடு, நதியா கிளிப் என அவை பிரபலமாகின. இந்த நிலையில் குஷ்புவின் திறந்த வெளி ஜாக்கெட் மூலம் பலரையும் கவர்ந்த ஜாக்பாட் நிகழ்ச்சியில் இனி நதியாவின் தனி ஸ்டைல் மூலம் புதுப் பரிமாணம் கிடைக்கப் போகிறது.

Comments

Most Recent