சென்னை, டிச.23:இந்திய திரைப்பட சம்மேளனத்தின் தலைவராக ஆனந்தா பிக்ஸர்ஸ் நிர்வாகி எல்.சுரேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளா...
சென்னை, டிச.23:இந்திய திரைப்பட சம்மேளனத்தின் தலைவராக ஆனந்தா பிக்ஸர்ஸ் நிர்வாகி எல்.சுரேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய திரைப்பட உலகம் முழுமைக்கும் தலைமையான இந்நிறுவனத்தின் தலைவராக 1994-ம் ஆண்டு ஏவி.எம் சரவணன் இருந்தார். அவருக்குப் பின் இப்பதவியை வகிக்கும் தமிழர் சுரேஷ் ஆவார்.2001-ல் இவரின் முதல் திரைப்படமான "ஊருக்கு நூறு பேர்' ஜனாதிபதியின் தங்கத் தாமரை விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 2001 முதல் மத்திய அரசின் திரைப்படத் தணிக்கைக் குழுவில் சிறப்பு உறுப்பினராக உள்ள இவர், தென்னிந்திய திரைப்பட ஏற்றுமதி சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
Comments
Post a Comment