வில்லன் அவதாரம் வெற்றியா? தோல்வியா?

நாணயம் படம் வெளியாகியிருக்கும் தியேட்டர்களில் சிபிராஜுக்கு கட் அவுட்டோ  பேனர்களோ இல்லை. ஆனால் தியேட்டரின்  உள்ளே அவர் வரும் எல்லா  காட்சிகளிலும் விசில் பறக்கிறது. காரணம் தனது அப்பா சத்தியராஜின் நக்கல் நடிப்பு ,

தனக்குறிய  யதார்த்த பணி நடிப்பு இரண்டின் கலவையாக வந்து ரசிகர்களை  கவர்ந்திருக்கிறார். தொலைபேசியில் சிக்கிய சிபியிடம் வில்லன்  அவதாரம் எடுத்தற்கு பலன் கிடைத்த்தா? என்றோம். “ காலையிலேர்ந்து மொபைல கீழ வைக்கமுடிய ஃபாஸ். இண்டஸ்ட்ரிலேர்ந்து, ரசிகர்கள்கிட்டெயிருந்துன்னு  கால்ஸ் வந்துகிட்டே இருக்கு. நாணயம் படத்தோட கதையை, இயக்குனர் ஷக்தி எங்கிட்ட படிக்க கொடுத்தார். படிக்க, படிக்க சுவாரஸ்யம் கூடிக்கொண்டே போச்சு.. அப்பாவுக்கு கூட கிடைக்காத வெரிக்ய+ட் வில்லன் ரோல்ன்னு தெரிஞ்சதாலதான் உடனே ஒத்துக்கிட்டேன். என்னோட கணக்கு தப்பாகல" என்கிறார்.

இதனால் உங்க ஹீரோ இமேஜுக்கு பாதிப்பு வராதா? தமிழ் சினிமான்னாலே இமேஜ் முன்னால வந்து உட்கார்ந்துடுமே" என்றதும்

"இப்போ பரவாயில்ல பாஸ். வெரைட்டியாக பண்ணாத்தான் ரசிகர்களுக்கு புடிக்குது நடிகன்னா எல்லா விதமான ரோலுக்கும் தயாராக இருக்கனும். "என்றவர் நாணயம் போல ஹீரோவுக்கு இணையாக வில்லன் வேடம் என்றால் தொடர்ந்து வில்லனாக நடிக்கலாம். ஆனா அப்படி அமையாது " என்று முடித்துகொண்ட சிபிராஜ் அடுத்து அறிமுக இயக்குனர் நந்தகுமார் இயக்கத்தில் ~சாந்துபொட்டு|. படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்

Comments

Most Recent