நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். 2-ம் திருமணத்தில் சட்டசிக்கல் வருமா? என்று வக்கீல்களுடன் ஆலோசனை நடத்துகிறார...
நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். 2-ம் திருமணத்தில் சட்டசிக்கல் வருமா? என்று வக்கீல்களுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.
நயன்தாரா, பிரபுதேவா ரகசிய காதல் அம்பலத்துக்கு வந்துள்ளது. இரு வாரங்களாக இருவரும் பொது இடங்களில் சேர்ந்து காட்சி தருகிறார்கள். பிரபுதேவா மனைவி ரம்லத் எங்கு பார்த்தாலும் நயன்தாராவை அடிப்பேன் என எச்சரித்து இருந்தார். ஆனால் தற்போது அவரிடம் எதிர்ப்பு அடங்கி உள்ளது. இதனால் இருவரும் சுதந்திரமாக திரிகிறார்கள்.
முதல்வருக்கு திரையுலகம் நடத்திய பாராட்டு விழாவில் இணைந்து ஆட்டம் போட்டனர். சென்னை விமான நிலையத்தில் பெங்களூரில் இருந்து வந்த விமானத்தில் இருந்து கைகோர்த்தப்படி இறங்கினர். காதல் தினத்தையொட்டி மயிலாப்பூரில் உள்ள மல்டி பிளக்ஸ் தியேட்டரில் “மை நேம் இஸ் கான்” படம் பார்த்தனர். சிட்டி சென்டரில் ஷாப்பிங் செய்தார்கள். கடற்கரையோரத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் விருந்து சாப்பிட்டனர்.
நயன்தாரா, பிரபுதேவா வீடுகளில் காதலுக்கு பச்சைக் கொடி காட்டப்பட்டு விட்டதாகவும் திருமணத்துக்கு இருவரும் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால்தான் பொது இடங்களில் துணிச்சலாக சுற்றுகிறார்கள் என்கின்றனர்.
ஓரிரு மாதத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. 2-ம் திருமணத்தில் சட்டசிக்கல் வருமா? என்று வக்கீல்களுடன் ஆலோசிக்கிறார்களாம். தனி குடித்தனத்துக்கும் இருவரும் தயாராகி வருகின்றனர். சென்னையில் நயன்தாராவுக்கு வீடு இல்லை. நட்சத்திர ஓட்டல்களில்தான் தங்குகிறார். எனவே புது பங்களா வீடு தேடுகிறார்கள்.
நயன்தாராவை திருமணம் செய்ய பிரபுதேவா அனுமதி கேட்கிறார் என்றும் ஒரு போதும் அதற்கு சம்மதிக்க மாட்டேன் என்றும் பிரபுதேவா மனைவி ரம்லத் கூறி இருந்தார். அவரை பிரபுதேவா மிரட்டினாராம்.
தற்போது ரம்லத் அமைதியாகி விட்டார். 2-ம் திருமணத்துக்கு அவரிடம் சம்மதம் வாங்க முயற்சிகள் நடக்கின்றன. சம்மதம் கிடைத்தால் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களை அழைத்து எளிமையாக திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
Comments
Post a Comment