Nayantara''s Love gift to Prabhu deva | பிரபுதேவாவுக்கு நயன்தாரா கொடுத்த காதல் பரிசு

http://www.extramirchi.com/wp-content/uploads/2009/10/Nayantara-and-Prabhu-Deva-together.JPG

நடிகை நயன்தாரா - நடிகர் பிரபுதேவா இடையே காதல் என்ற செய்தி அதர பழசாகி விட்டாலும், இவர்களது காதல் குறித்த செய்தி மட்டும் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் புதிதாக வெளியாகியிருக்கும் செய்தி பிரபுதேவாவுக்கு, நடிகை நயன்தாரா வைர டாலர் பதித்த தங்க செயினை காதல் பரிசாக வழங்கியிருக்கிறார் என்பதுதான். பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ரமலத் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கும் நிலையில் நயன்தாராவுடன் காதல் வயப்பட்டார். நயன்தாராவும் சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு ஆறுதலுக்காக பிரபுதேவாவிடம் நட்பாக பழக ஆரம்பித்து மனதை பறிகொடுத்தார். காதல் ஜோடிகளாக சென்னைக்கும், மும்பைக்கும் பறந்து கொண்டிருக்கும் பிரபுதேவாவும், நயன்தாராவும் தங்களது காதலை இதுவரை வெளிப்படையாக தெரிவிக்க வில்லை. இதுபற்றி நிருபர்கள் கேள்வி கேட்டால், அது எங்கள் சொந்த விஷயம், பர்சனல் கேள்விகள் வேண்டாமே... என்று ஒற்றை வரியில் பதில் சொல்லி முடித்து விடுகிறார்கள்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கேரளாவில் இந்த காதல் ஜோடிகளுக்கு திருமணம் ஆகி விட்டது என்ற செய்தி வெளியானது. ஆனால் அதனை உடனடியாக இருவருமே மறுத்தனர். இந்நிலையில் நயன்தாரா தனது காதல் பரிசாக பிரபுதேவாவுக்கு வைர டாலர் பதித்த தங்கச் சஙகிலியை அணிவித்து இருக்கிறார். பிரவு தேவாவின் கழுத்தில் தொங்கும் அந்த செயின் டாலரில் என் (நயன்தாரா) பி (பிரபுதேவா) என்று பதிக்கப்பட்டுள்ளன. காதலி அளித்த காதல் பரிசு செயினை பிரபுதேவா எப்போதும் தன் கழுத்திலேயே அணிந்திருக்கிறாராம்.

Comments

Most Recent