தரணி படத்துக்கு ஒளிப்பதிவு செய்யாதது ஏன்? ‘குலசேகரனும் கூலிப்படையும்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வரு...
தரணி படத்துக்கு ஒளிப்பதிவு செய்யாதது ஏன்?
‘குலசேகரனும் கூலிப்படையும்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் ஆர்.டி.ராஜசேகர். அவர் கூறியதாவது: தெலுங்கில் கடைசியாக அல்லு அர்ஜுன், ஆர்யா நடித்த ‘வருடு’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்தேன். தமிழில் இப்போது ‘குலசேகரனும் கூலிப்படையும்’ படத்தில் பணியாற்றி வருகிறேன். இன்னொரு படத்துக்காகவும் பேச்சு நடக்கிறது. இதற்கிடையே தெலுங்கில் தரணி இயக்கும் படத்தில் ஒளிப்பதிவு செய்ய கேட்டார்கள். அவர்கள் கேட்ட தேதியில் ‘குலசேகரனும் கூலிப்படையும்’ பட ஷூட்டிங் இருந்தது. அதற்காக முன்பே தேதிகளை ஒதுக்கி இருந்தேன். அதனால் தெலுங்கு படத்தை ஒப்புக்கொள்ள முடியவில்லை. டைரக்ஷன் எப்போது எனக் கேட்கிறார்கள். அதற்கான தருணம் விரைவில் வரும். இவ்வாறு ராஜசேகர் கூறினார்.
‘குலசேகரனும் கூலிப்படையும்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் ஆர்.டி.ராஜசேகர். அவர் கூறியதாவது: தெலுங்கில் கடைசியாக அல்லு அர்ஜுன், ஆர்யா நடித்த ‘வருடு’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்தேன். தமிழில் இப்போது ‘குலசேகரனும் கூலிப்படையும்’ படத்தில் பணியாற்றி வருகிறேன். இன்னொரு படத்துக்காகவும் பேச்சு நடக்கிறது. இதற்கிடையே தெலுங்கில் தரணி இயக்கும் படத்தில் ஒளிப்பதிவு செய்ய கேட்டார்கள். அவர்கள் கேட்ட தேதியில் ‘குலசேகரனும் கூலிப்படையும்’ பட ஷூட்டிங் இருந்தது. அதற்காக முன்பே தேதிகளை ஒதுக்கி இருந்தேன். அதனால் தெலுங்கு படத்தை ஒப்புக்கொள்ள முடியவில்லை. டைரக்ஷன் எப்போது எனக் கேட்கிறார்கள். அதற்கான தருணம் விரைவில் வரும். இவ்வாறு ராஜசேகர் கூறினார்.
Comments
Post a Comment