பட தயாரிப்பை தள்ளிப்போட்டது ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சித்தார்த் நடிப்பில் தெலுங்கில் படத்தை தயாரித்து, இயக்குவதாக முன்பு தெரிவித்தார் பிரபு தேவா. இப்போது அந்த திட்டத்தை தள்ளிப்போட்டுள்ளாராம். தமிழில் படம் இயக்கி வருகிறார். அடுத்து இந்தியிலும் அவர் படம் இயக்க உள்ளார். இதனால் பட தயாரிப்பில் இப்போதைக்கு அவர் ஈடுபடவில்லை என பிரபு தேவாவுக்கு நெருங்கியவர்கள் கூறினர். அவர்கள் இப்படி சொன்னாலும் இதற்கான உண்மை காரணம் வேறு என கூறுகிறது கோடம்பாக்க வட்டாரம். பிரபு தேவா, நயன்தாரா காதல் நிறைவேறுவதில் சிக்கல்கள் உள்ளன. அதில் பிரபு அப்செட்டாக உள்ளார். அதனால் தயாரிப்பு பணியை தள்ளிப்போட்டுள்ளார் என்கிறது அந்த வட்டாரம்.

Comments

Most Recent