கோ படத்தில் மும்பை தீவிரவாதிகள் சம்பவம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, அஜ்மல், பியா, கார்த்திகா நடிக்கும் படம் 'கோ'. இதன் ஷூட்டிங் சமீபத்தில் சென்னை மின்ட் பகுதியில் நான்கு நாட்களாக நடந்தது. கதைப்படி கிளைமாக்சில் இடம்பெறும் காட்சியை கே.வி. ஆனந்த் படமாக்கினார். 'மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் போன்ற காட்சி. அந்த தாக்குதல் நடந்தபோது, தீவிரவாதிகள் மற்றும் கமாண்டோக்கள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அதே போல மின்ட் பகுதியில் உள்ள சாலைகளில் ஒரு வீட்டை குறிவைத்து தாக்குதல் நடப்பது போல படமாக்கினோம். படத்தின் கிளைமாக்சில் இடம்பெறும் இந்தகாட்சி த்ரில்லாக இருக்கும்' என பட யூனிட் தெரிவித்தது.

Comments

Most Recent