திலீப் தயாரிக்கும் மலையாள படத்தில், ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறார் சரத்குமார். 'பழசிராஜா' படத்துக்கு பிறகு மலையாளத்தில் பிசியாகிவிட்டா...
திலீப் தயாரிக்கும் மலையாள படத்தில், ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறார் சரத்குமார். 'பழசிராஜா' படத்துக்கு பிறகு மலையாளத்தில் பிசியாகிவிட்டார் சரத்குமார். மோகன்லாலுடன் 'கிறிஸ்டியன் பிரதர்ஸ்', 'ஓரிடத்தோரு போஸ்ட்மேன்' படங்களில் நடித்து வந்த அவர், இப்போது 'மெட்ரோ' என்ற படத்தில் நடிக்கிறார். இதை மலையாள ஹீரோ திலீப்பின் கிராண்ட் புரொடக்ஷன் தயாரிக்கிறது. வியாசன் எடவக்காடு இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, 'சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மேலும், 5 புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். ஆக்ஷன் கதைதான். வித்தியாசமாக இருக்கும்' என்றார்.
Comments
Post a Comment