தான் இயக்கும் படங்களுக்கு தானே கேமரா பணியும் கவனித்து வந்தார் பாலுமகேந்திரா. கடை...
தான் இயக்கும் படங்களுக்கு தானே கேமரா பணியும் கவனித்து வந்தார் பாலுமகேந்திரா. கடைசியாக தனுஷ், பிரியாமணி நடித்த 'அது ஒரு கனா காலம்Õ படத்தை இயக்கி, ஒளிப்பதிவு செய்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, இப்போது புதிய படம் இயக்க உள்ளார். மீண்டும் பிரியாமணி ஹீரோயினாக நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். புதுமுக நடிகர் ஒருவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்துக்கு பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்யவில்லை. இனி டைரக்ஷனில் மட்டும் அவர் கவனம் செலுத்த விரும்புவதாக கூறப்படுகிறது. பூனே திரைப்பட கல்லூரியில் தங்கப்பதக்கம் பெற்ற அன்வர் என்பவர் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தனது நடிப்பு பள்ளியில் படிப்பவர்களையும் இப்படத்தின் தொழில்நுட்ப பணிகளில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளார் பாலு மகேந்திரா.
Comments
Post a Comment