சினிமாவுக்கு வந்து 50 வருடம் ஆனதையடுத்து கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா நடத்தியது. மலையாள திரையுலகிலேயே 50 வருடம் கடந்த நடிகர்கள் ...
சினிமாவுக்கு வந்து 50 வருடம் ஆனதையடுத்து கமல்ஹாசனுக்கு கேரள அரசு பாராட்டு விழா நடத்தியது. மலையாள திரையுலகிலேயே 50 வருடம் கடந்த நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்களை பாராட்டாமல் கமலை பாராட்டுவதற்கு மலையாள நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து விழாவை புறக்கணித்தனர். இந்த விழாவில் பங்கேற்க முடியாததால் கமலின் மகள் ஸ்ருதி வருத்தமாக இருக்கிறாராம். இது பற்றி அவர் கூறும்போது, 'படப்பிடிப்பு மற்றும் இசை ஆல்பம் தயாரிப்பில் பிஸியாக இருந்தேன். அதனால் அப்பாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்க முடியவில்லை. இது வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தேன்Õ என்றார்.
Comments
Post a Comment