இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் சிரஞ்சீவி என்று அவரது மகன் ராம் சரண் கூறினார். தெலுங்கு நடிகரும், பிரஜா ராஜ்ய கட்...
இதையடுத்து ரசிகர்கள் முன்னிலையில் ராம் சரண் கேக் வெட்டி தந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடினார். முன்னதாக தனது வீட்டில் குடும்பத்தினருடன் பிறந்த நாளை கொண்டாடினார் சிரஞ்சீவி. கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, "கட்சியை பலப்படுத்துவதற்கான முயற்சியில் கடந்த 2 வருடமாக உழைத்து வருகிறார் சிரஞ்சீவி. அடுத்த வருடத்துக்குள் பலம் வாய்ந்த கட்சியாக பிரஜா ராஜ்யம் மாறிவிடும். தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்காக மக்களை சந்திக்கும் பணியில் இப்போது ஈடுபட்டிருக்கிறார். மாநிலத்தில் இடைத்தேர்தல் வரும் சூழல் உள்ளது. ஒருவேளை அந்த நிலை மாறினால் கட்சி பணிக்கு சில காலம் ஓய்வு கொடுத்துவிட்டு சினிமாவில் நடிக்க வரலாம்" என்றார்.
Comments
Post a Comment