மீண்டும் கிராமத்து கதையில் கதிர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news


'வெளுத்துக்கட்டு' படத்தில் அறிமுகமான கதிர், மீண்டும் கிராமத்து கதையில் நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 'வெளுத்துக்கட்டு' படத்தில் எனது கேரக்டர் பேசப்படுவதாக இருந்தது. அதற்கு பிறகு வந்த கதைகள் அனைத்தும் கிராமத்து கதைகளாகத்தான் இருக்கிறது. நானும் இன்னொரு கிராமத்து படத்தில் நடித்து முழுமையாக என்னை வெளிப்படுத்துவது என்று முடிவு செய்திருக்கிறேன். 'வெளுத்துக்கட்டு' படத்தில் மிகவும் ஒல்லியாக இருந்தேன் என்ற விமர்சனம் இருந்ததால் எடையைக்கூட்டி வருகிறேன். தியேட்டர் லேபில் தொடர்ந்து நடிப்பு பயிற்சி எடுத்து வருகிறேன். ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். அதில் உடன்பாடில்லை. படிப்படியாக வளர விரும்புகிறேன். அடுத்தும் கிராமத்து கதையை தேர்வு செய்திருக்கிறேன்.

Comments

Most Recent