கேரளாவை சேர்ந்த வித்யாபாலன், தமிழில்தான் அறிமுகமாக இருந்தார். தயாரிப்பாளர் நிராகரித்ததால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. பின் இந்தி சினிமாவு...
கேரளாவை சேர்ந்த வித்யாபாலன், தமிழில்தான் அறிமுகமாக இருந்தார். தயாரிப்பாளர் நிராகரித்ததால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. பின் இந்தி சினிமாவுக்கு சென்று பிரபலம் ஆனார். இப்போது முதல் முறையாக தமிழில் நடிக்க உள்ளார். சந்தோஷ் சிவன் தமிழ், மலையாளத்த¤ல் இயக்கும் படம் ÔஉருமிÕ. இத¤ல் பிருத்விராஜ், பிரபு தேவா, ஜெனிலியா ஆகியோருடன் வித்யாபாலன் நடிக்கிறார். படத்தின் கதைப்படி ஒரு காட்சியில் வித்யாபாலன் மோகினி ஆட்டம் ஆட வேண்டும¢. இதற்கான ஷூட்டிங்கை மும்பையில் நடத்த சந்தோஷ் சிவன் திட்டமிட்டிருந்தார். ஆனால் திடீரென ஷூட்டிங்கில் பங்கேற்க முடியாது என கூறியுள்ளார் வித்யா. சமீபத்தில் ஜிம்மில் பயிற்சி செய்தபோது வித்யாவுக்கு தசை பிடிப்பு ஏற்பட்டது. இதில் தோளில் கடுமையாக வலி ஏற்பட்டுள்ளதாம். இதனால் அவர் டான்ஸ் ஆட மறுத்துள்ளார்.கடுமையான தோள் வலியால் வித்யா அவதிப்படுகிறார். டான்ஸ் ஆடினால் வலி இன்னும் அதிகமாகும். அதனால் உடல் நிலை சரியான பின் அந்த டான்ஸ் காட்சியை படமாக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். அந¢த டான்ஸ் காட்சி இப்போதே அவசரம் என்றால், மாற¢று ஏற்பாடு குறித்து இயக்குனர்தான் முடிவு செய்ய வேண்டும்Õ என வித்யாவுக்கு நெருங்க¤ய வட்டாரங்கள் தெரிவித்தன.
Comments
Post a Comment