நிலம் வாங்கித் தருவதாக வடிவேலுவிடம் பல கோடி மோசடி?


சென்னை, ​​ பிப்.​ 3:​ பல கோடி ரூபாய் நில மோசடி தொடர்பாக நடிகர் வடிவேலு அளித்த புகாரின் பேரில்,​​ நடிகர் சிங்கமுத்து மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து சிங்கமுத்து தனது குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக தெரியவந்துள்ளது.​ இவரை போலீஸôர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.நடிகர்கள் வடிவேலு,​​ சூர்யா உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த 5 பேரின் வீடு,​​ அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 19}ம் தேதி சோதனை நடத்தினர்.விருகம்பாக்கத்தில் உள்ள வடிவேலுவுக்குச் சொந்தமான வீடு,​​ அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.​ அதே நேரத்தில் மதுரை விரகனூரில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரி சோதனை நடந்தது.இதில் சில முக்கிய சொத்து ஆவணங்களை சரிபார்த்தபோது,​​ பெரும்பாலானவை புறம்போக்கு நிலங்கள்,​​ சுடுகாட்டு மனைகள் என்பது தெரியவந்தது.இதில் ரூ.7 கோடி அளவுக்கு தான் மோசடி செய்யப்பட்டதாக வடிவேலுவுக்குத் தெரியவந்தது.இதையடுத்து இந்த நிலம் மற்றும் வீட்டு மனைகளை வாங்கித் தந்த தனது நண்பரும் சக நடிகருமான சிங்கமுத்துவிடம் பணத்தைத் திருப்பித் தருமாறு வடிவேலு கேட்டுள்ளார்.ஆனால்,​​ சிங்கமுத்துவும்,​​ வடபழனி பகுதியைச் சேர்ந்த சிலரும் வடிவேலுவை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.இதுதொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வடிவேலு அளித்த புகாரின் பேரில்,​​ வழக்குப் பதிவு செய்யப்பட்டது.​ ÷இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் தனிப்படை போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.போலீஸôர் சமரச முயற்சி...இது தொடர்பாக சிங்கமுத்துவையும்,​​ வடிவேலுவையும் அழைத்துப் பேசி சமரசத் தீர்வு காண போலீஸôர் முயற்சி மேற்கொண்டனர்.ஆனால்,​​ போலீஸôர் தன்னை கைது செய்யக் கூடும் என்று அஞ்சியதால்,​​ சிங்கமுத்து தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகி விட்டார்.​ ÷வடபழனியைச் சேர்ந்த உதவி இயக்குநர் உள்ளிட்ட இவரது நண்பர்களும் தலைமறைவாகிவிட்டனர்.இதையடுத்து நெசப்பாக்கம் கோத்தாரி நகரில் உள்ள சிங்கமுத்துவின் வீட்டை போலீஸôர் கண்காணித்து வருகின்றனர்.வடிவேலு பேட்டி:​​ இந்த நிலையில் செய்தியாளர்களிடம் வடிவேலு புதன்கிழமை கூறியதாவது:சினிமாவில் சம்பாதித்த பணத்தில் நிலம் வாங்க நினைத்து,​​ என்னுடன் நடித்த சிங்கமுத்துவை நம்பி பல கோடி ரூபாய் முதலீடு செய்தேன்.ஆனால், ​​ எனது வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனைக்குப் பின்னரே நான் வாங்கிய நிலங்கள் புறம்போக்கு நிலங்கள் என்பது தெரியவந்து அதிர்ச்சி அடைந்தேன்.திரைப்படங்களில் ஏமாளியாக நடித்த நான் நிஜ வாழ்க்கையிலும் ஏமாற்றப்பட்டேன்.சிங்கமுத்துவிடம் எனது பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டேன்.​ ஆனால்,​​ அவர் நேரடியாகவும்,​​ ஆள்களை வைத்தும் மிரட்டினார்.​ ÷எனது உயிருக்கும்,​​ உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கக் கோரி போலீஸôரிடம் புகார் செய்துள்ளேன்.இழந்த பணத்தை எப் பாடுபட்டாவது மீட்பதில் உறுதியாக உள்ளேன் என்றார் வடிவேலு.

Comments

Most Recent