செல்வராகவன் தெலுங்கு நடிகர் ராணாவை வைத்து தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் படம் இயக்குவதாக குறிப்பிட்டிருந்தோம். இந்தப் படத்தில் நடிக்க ரீ...
செல்வராகவன் தெலுங்கு நடிகர் ராணாவை வைத்து தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் படம் இயக்குவதாக குறிப்பிட்டிருந்தோம். இந்தப் படத்தில் நடிக்க ரீமா சென் மறுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக மற்ற அனைவரையும் விட செல்வராகவனை அதிகம் புகழ்ந்தவர் ரீமா சென். செல்வாவின் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆவலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் செல்வாவின் இருமொழிப் படத்தில் அவர் நடிக்க மறுத்ததாக நம்பத்குந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏன் இந்த மறுப்பு?
இந்தப் படத்தில் ராணா ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். அவர்தான் ஹீரோயின். படத்தின் ஃப்ளேவரை கூட்ட ரீமா சென்னின் ஆட்டத்தையும், சில காட்சிகளையும் படத்தில் சேர்க்க விரும்பியிருக்கிறார் செல்வராகவன். படத்தின் முக்கிய பாத்திரமல்ல, தொட்டுக்க ஊறுகாய் இது என்பது தெரிந்ததால் நடிக்க முடியாது என மறுத்திருக்கிறார் ரீமா சென்.
ஒளிப்பதிவு ராம்ஜி, இசை ஜி.வி.பிரகாஷ்குமார் என அதே ஆயிரத்தில் ஒருவன் டீமுடன் மீண்டும் கைகோர்த்துள்ளார் செல்வராகவன்.
Comments
Post a Comment