Why IIFA award celebrations in Srilanka?

இந்திய சர்வதேச திரைப்பட சங்கம் (The International Indian Film Academy (IIFA) awards) நடத்தும் 2010 க்கான விருது வழங்கும் விழா, வருகிற ஜூலை 2 முதல் 4 வரை சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் நடைபெறவுள்ளது.இது தொடர்பில், சிறிலங்கா சுற்றுலாத்துறை அமைச்சர் ஆச்சல ஜயகொட தெரிவிக்கையில், இவ்விழா நடத்துவதற்கென  பல நாடுகளுடன் போட்டியிட்டு, இவ்வாய்ப்பை பெற்றுள்ளதாகவும், அதனால் நல்ல முறையில் இவ் வாய்ப்பை பயன்படுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல் சம்பவங்களினால், ஆளும் அரசிற்கு எதிராக உலக நாடுகள் பல கடும் அழுத்தங்களை பிரயோகித்து வருவதுடன், எவ்வித சர்வதேச பொது விழாக்களையும் அங்கு நடத்துவதை தவிர்த்து வரும் நிலையில், இந்திய சினிமாத்துறையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த 'iifa' விருது வழங்கும் விழாவினை சிறிலங்காவில் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது சிறிலங்காவின் சுற்றுலாத்துறையினையும் வளர்ச்சியடைய செய்வதாக ஆச்சல ஜெயகொட ஏற்கன்வே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

Most Recent