வீரப்பன் நித்யானந்தா கதைகளுக்கு ஹீரோ வேட்டை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மும்பையை கலக்கும் நிஜ தாதா கதைகளை படமாக்கி வரும் ராம்கோபால் வர்மா, ஆந்திரவை கலக்கிய ரவுடி பரிதாலா ரவியின் கதையை 'ரத்த சரித்திரம்Õ என்ற பெயரில் உருவாக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகியுள்ள இப்படத்தில் சூர்யா, விவேக் ஓபராய் நடித்துள்ளனர்.
அடுத்து சந்தன கடத்தல் வீரப்பன், நித்யானந்தா கதைகளை இந்தியில் இயக்குகிறார். வீரப்பன் கதைக்கு Ôபாண்டிட் வீரப்பன்Õ என்றும் நித்யானந்தா கதைக்கு 'காட் அண்ட் செக்ஸ்Õ என்றும் பெயரிட்டிருக்கிறார். வீரப்பன் கதைக்கு, சந்தன மரங்களை வெட்டியது முதல் ராஜ்குமாரை கடத்தியது வரையிலான தகவல்களை சேகரித்துள்ளார் வர்மா. படத்தை உருவாக்குவதற்கான உரிமையை வீரப்பன் மனைவியிடம் முறைப்படி வாங்கி இருக்கிறார். நித்யானந்தாவின் லீலைகள் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை படமாக்கும் பணியிலும் ராம்கோபால் வர்மா முந்திக்கொண்டிருக்கிறார். இதற்கான ஸ்கிரிப்ட் முடிவடையும் தருவாயில் உள்ளது. இரண்டு படங்களிலுமே முகம் தெரிந்த ஹீரோக்களுக்கு பதிலாக புதுமுக ஹீரோக்களை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் விரைவில் சென்னையில் முகாமிட்டு ஆடிஷன் நடத்த உள்ளாராம். ஹீரோ தவிர மற்ற கேரக்டர்களுக்கும் இங்கேயே புதுமுகங்களை தேர்வு செய்ய உள்ளார். ஹீரோயின் வேடங்களுக்கு மட்டும் பாலிவுட் கவர்ச்சி நடிகைகளை நடிக்க வைக்க திட்டமாம். இரு படங்களையும் இந்த ஆண்டு இறுதியில் ஆரம்பிக்கிறார்..
Source: Dinakaran

Comments

Most Recent